twitter
    Find out what I'm doing, Follow Me :)
Showing posts with label பழசு. Show all posts
Showing posts with label பழசு. Show all posts

ஆதலினால் காதல்................

எத்தனை நாட்களுக்குதான் நான் பணிபுரியும் என் துறையை பற்றி சொல்லி உங்களை வெறுப்பேற்றுவது ஆதலினால்..... காதல் பற்றி

காதல் என்பது இரு உள்ளங்கள் மனதால் ஒன்றுபட்டு அன்பினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புதான் காதல்

ஆனால் இன்றைய காதல்கள் போலிதனத்தின் வெளிப்பாடு, வீட்டில் கஞ்சிக்கு வழியில்லை என்றாலும், முகம் நிறைய புது வீட்டிற்கு வெள்ளையடித்ததை போல் பவுடர், கழுத்தில் கவரிங் நகை தெரிய இரண்டு பட்டன்களை கழட்டி விட வேண்டியது. நண்பனின் ஓசி பைக்கை வாங்கி கொண்டு மாலை நேரம் பள்ளி கல்லூரி அருகில் சுற்ற வேண்டியது. பல பெண்களை பார்க்க வேண்டியது. அதில் ஒன்று எப்படியாவது கண்டிப்பாக பார்க்கும். காதலர்கென்றே கண்டுபிடித்த காதலர் தினத்தில் ஒரு ரோஜாவை கொடுக்க வேண்டியது. பின் இருவரும் இணைந்து பார்க், பீச் என்று சுற்ற வேண்டியது.

பின் தன் நண்பர்கள் புடை சூழ ஒரு நாள் கோவிலிலோ அல்லது காவல் நிலையத்திலோ (!) ( இருக்கற பிரச்சினைகளில் இது தானே முதல் வேலை ) பெத்து 18 வருசம் வளத்துன தாய் தகப்பன் மண்ணவாரி தூத்த திருமணத்தை நடத்த வேண்டியது. கூட வந்தவன் எல்லலாம் "ஹேப்பி மேரிடு லைப் (?) மாப்ள ன்னுட்டு அவனவன் வீட்டுக்கு போயிடுவான். அப்புறம் பொண்ணோ இவனோ எடுத்துட்டு வந்த பணத்தில மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் கணக்கில ஜாலியா இருக்க வேண்டியது. பணம் தீர்ந்ததும் தான் அவர்கள் இருவரும் நிலையும் அவர்களுக்கு தெரியும். இதில் இருவரும் அவரவர் வீட்டுக்கும் போக முடியாது. உண்மையான நண்பர்கள் என்றாலும் அவர்களும் எத்தனை நாள் உதவி செய்வார்கள் ?.

இதற்கு காரணம் இன்றை திரைப்டங்களே, காதலிக்கவோ அல்லது காதலிக்கப்பட்டாளோதான் நாம் சமுதாயத்தில் வாழ்வதற்கு அர்த்தம் என்ற வகையில் திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு திரைப்படத்தில் பார்த்தாலும் கதாநாயகன் கதாநாயகியை காதலிக்க வேண்டியது. கிளைமாக்ஸில் கதாநாயகனுக்கு அல்லக்கையாக வரும் நண்பர்கள் ( அவ உன்னதான் பாக்குறாடா நண்பா !! ) இருவரையும் இணைத்து வைக்க வேண்டியது அப்புறம் சுபம்.


அதுக்கு அப்புறம் கதாநாயகன் கதாநாயகி சமுகத்தில் படும் அவலத்தை எத்திரைப்படமும் ( காதல் தவிர ) சொல்லவில்லை. சமுகத்தால் அங்கீகரிக்கபடாதவர்கள் இவ்வுலத்தில் சந்தோஷமாக வாழ்வது சாத்தியமில்லை. பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் காதல் தவிர ( உ.தா. சூர்யா ஜோதிகா ) இன்றை காதலுக்கு பொருளாதாரம் மிக அவசியம் என்றாகிவிட்டது. இன்றை பெண்கள் கூட ஆள் எவ்வளவு சம்பாதிக்கிறான் வேலை நிலையானதா என்று பார்த்து காதலிக்கும் நிலை உள்ளது.

காதலால் சாதி ஒழிகிறது என்ற கருத்தையும் என்னால் ஏற்க முடியவில்லை. ஒன்று காதலிப்பவர்கள்களில் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தங்களில் யார் தாழ்ந்த சாதியினாராய் இருக்கிறாரோ அவரது சாதியை குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வாங்குகிறார்கள். (அரசு சலுகைக்காக) அல்லது யார் உயர்ந்த சாதியினராய் இருக்கிறாரோ அவர் இனத்திலேயே பெண் எடுக்கும் அல்லது கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதில் சாதி எங்கு ஒழிகிறது. என்பது தெரியவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் தாழ்ந்த சமுகத்தை சேர்ந்த ஆண் உயர் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தவரை இரண்டு ஆண்டுகளாக தேடி பெண்ணி சித்தப்பா கூலிப்படையினரை கொண்டு அந்த தாழந்த சாதி ஆணை வெட்டி கொன்று விட்டான். காதலிக்க தகுதியில்லாத நாடு இது.

நான் எனது காவல்துறை அனுபவத்தில் கண்ட வகையில் இன்றைய காதல்கள் 100% க்கு 98% காதல்கள் தோல்வியில் தான் முடிகின்றன. 2% காதல்கள் ஆணோ அல்லது பெண்ணோ உயர்ந்த பொருளாதரத்தில் இருப்பதன் முலம் அல்லது ஓரெ சாதியாய் இருப்பதன் முலம் வெற்றியடைகின்றன. காதலிக்கும் போது இருக்கும் தைரியமும், மனோதிடமும் திருமணம் முடித்து வாழ்க்கை நடத்தும் போது இருவருக்கும் இருப்பதில்லை.

நான் காதலுக்கு எதிரியில்லை நான் முதலில் சொன்னது போல் காதல் என்பது இரு உள்ளங்கள் மனதால் ஒன்றுபட்டு அன்பினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புதான் காதல் அது இப்போது இல்லை என்பதுதான் என் வாதம்.



நன்றி .................


அம்பலமாகும் உங்கள் அந்தரங்கங்கள்


அலுவலக வேலை காரணமாக எழுத முடியவில்லை பின்னுட்டம் அளித்த வலையுலக நண்பர்களுக்கு நன்றி.....

இன்று நம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மொபைல்.........



கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமலர் செய்தி தாளில் ஒரு செய்தியை படித்தருப்பீர்கள். சில வக்கிரம் எண்ணம் கொண்டவர்கள். தன்னுடன் பழகிய, படித்த, பணி புரிந்த பெண்களை வக்கிரமாக மொபைல் போனில் படம் பிடித்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள அது பரவி சம்பந்தப்பட்ட சில பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவமும் நடந்ததது.

இது போன்ற சம்பவம் எனது காவல் நிலையத்திலும் நடந்ததால் இந்த பதிவை எழுதுகிறேன். கடந்த சில நாட்களுக்குமுன்பு இரவு பணி செய்து கொண்டிருந்த போது ஒரு 16 வயது மதிக்கத்தக்க ஒருவன் சந்தேகப்படும்படி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்ததாக சக அலுவலர் அழைத்து வந்தார். அவரை சோதனையி்ட்ட போது அவர் வைத்திருந்த போன் விலை உயர்ந்ததாக இருக்க சரி பார்க்கலாம் என்று அந்த போனை நோண்டி கொண்டிருந்தேன். அதில் சில வீடியோக்களும் இருக்க பார்த்தால் அத்தனையும் குடும்ப பெண்கள். வீடு கூட்டும் போது, துவைக்கும் போது உடை மாற்றும் போது, குளிக்கும் போது இதை விடக் கொடுமை ஒரு தாய் தன் குழந்தைக்கு பால் ஊட்டும் போது அந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டிருந்தது.

பிறகு அவனை அழைத்து "உரிய" முறையில் விசாரிக்க அவர்கள் தன் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் என்றும் தான் விளையாட்டாய் எடுத்ததாகவும் கூறினான். பிறகு அடுத்த நாள் காலை வரை வைத்திருந்து அவனது தந்தைக்கு போன் செய்து வரச் சொல்லி, வீடியோவில் சம்மந்தப்பட்டவர்களையும் வரச் சொல்லி இது குறித்து கூற அவர்கள் அனைவரும் அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தங்களின் வீட்டருகே பல வருடங்களாக குடியிருப்பதாகவும் சிறு வயதிலிருந்தே அவனை தெரியும் என்பதால் தாங்கள் அவனை சந்தேக படவில்லை என்றும் புகார் அளித்தால் தங்கள் பெயரும் கெட்டுவிடும் என்று கூறியதால் அவனது தந்தையை அழைத்து எச்சரித்து எனக்கு தெரிந்த மொபைல் கடையில் அவனது மொபைல் ஐ கொடுத்து பிளாஷ் செய்து அவனது மெமரி கார்டை அவர்கள் முன்னிலையிலேயே உடைத்து. விட்டேன்.

பெண்களுக்கு : உங்கள் நெருங்கிய தோழியாக இருந்தாலும் உங்களை அரைகுறை ஆடையுடன் படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம் ( விளையாட்டாக இருந்தாலும் கூட ) ஏனென்றால் தோழி என்றும் உங்களுக்கு தோழியாக இருக்க போவதில்லை சின்னப்பிரச்சினை வந்தாலும் உங்களின் நிலை ?

இன்னொரு பிரச்சினை பெண்களுக்கு ( ஆண்களுக்கும் கூட ) வரும் மொபைல் அழைப்புகள் முடிந்தவரை உங்களுக்கு தெரியாத எண்களில் அழைப்புகள் வந்தால் அட்டன் செய்ய வேண்டாம். இரண்டு முறை முன்று முறை அழைப்புகள் வந்தால் அருகில் உள்ள ஆண் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கொடுத்து பேச செய்யுங்கள் தெரிந்தவர்கள் என்றால் வாங்கி பேசுங்கள்.

மற்றொன்று நீங்கள் உங்கள் காதலனிடமே அல்லது காதலியிடமோ ( அல்லது மற்றவரிடமோ) மொபைலில் பேசும் எதிர் முனை பீப்... பீப்...பீப்... என்ற ஒலி கேட்கிறதா என்று பாருங்கள் அப்படி ஒரு ஒலி கேட்டால் உங்கள் பேச்சுக்கள் ரெக்கார்டு செய்யப்படுகிறது என்று அர்த்தம். முடிந்தவரை அப்போதே உங்கள் தொடர்பை துண்டியுங்கள்.

பேசும் போது சரி தெரியாதவர்களிடமிருந்து எஸ்எம்.எஸ் வந்தால் ? கண்டு கொள்ளாதீர்கள். திரும்ப நீங்கள் Who are You ? / Who is This ? / Your Name Pls என்று எஸ்எம்.எஸ் அனுப்ப ஆரம்பித்தால் அங்கு ஆரம்பிக்கும் சனி. எஸ்எம்.எஸ் அனுப்பியவன் உங்களின் பதிலால் உற்ச்சாகமாகி உங்களிடம் பேச்சை வளர்ப்பான். உங்களிடம் உரிய பதில் இல்லை என்றால் மறுபடி எஸ்எம்.எஸ் வராது. அப்படி மீறி எஸ்எம்.எஸ் ஓ தேவையில்லாத அழைப்புகள் வந்தால் தாராளமாக உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். ( தமிழ் நாடு காவல் நிலைய தொலைபேசி எண்கள் )

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் காவல் துறைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல. தாராளமாக புகார் தெரிவிக்கலாம். உங்களை பாதிக்கும் என்றால் உங்களை பற்றிய விபரங்கள் ரகசியமாக வைப்பார்கள். எங்களுக்கும் நண்பர்கள், குடும்பம், உறவினர்கள் உண்டு.

மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்க்க :

  1. பெண்கள் முடிந்தவரை கணவனோ, காதலனோ தன்னை ஆபாசமாக படம் எடுப்பதை அனுமதிக்கூடாது.
  2. முடிந்தவரை தனது மொபைல் எண்களை அவசியம் ஏற்பட்டாலன்றி யாருக்கும் அளிக்க வேண்டாம்.
  3. முடிந்தவரை ஈஸி ரீச்சார்ஜ் ஐ பயன் படுத்தாதீர்கள் ( ஒரு கடையில் பெண்களின் எண்களை மட்டும் தனியாக குறித்து அவர்களுக்கு கடை பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பி பெண்கள் பாதிக்கப்பட்டதனால் இந்த குறிப்பு )
  4. வீடு மற்றும் பொது இடங்களில் தங்களின் உடலை வெளிப்படுத்தும் வண்ண்ம் உடை அணிய வேண்டாம்.

என்னடா எல்லாம் பெண்களுக்கே அட்வைஸ் பண்றானே நமக்கில்லையா என்று யோசிக்கும் ஆண் நண்பர்களுக்கு...

முடிந்தவரை உங்கள் பிள்ளைகளுக்கு கேமிரா, புளுடுத் இல்லாத மொபைல்களை வாங்கி கொடுங்கள். மொபைல் என்பத நாம் அவர்களை தொடர்பு கொள்வதற்காக மட்டுமே இருக்கட்டும்.

அப்புறம் ஒன்னு. நம்மளையெல்லம் அரைகுறையா போட்டோ எடுத்து எவன் பாக்கறது. முடிந்தவரை உங்கள் உறவினர்கள், பெண் தோழிகளுக்கு மொபைல் போனால் ஏற்படும் விபரீதங்களை எடுத்து சொல்லுங்கள்.


நன்றியுடன்.................









நாய் படாத பாடுபடும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

புதிதாய் எழுத தொடங்கிய எனக்கு பின்னுட்டமிட்டு ஆதரவளித்த வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல......

இந்திய அரசால் அரசின் நலதிட்டங்கள், அரசு துறை சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் பொது மக்கள் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டம்தான் தகவல் அறியும் உரிமைச்சட்டம். ஆனால் தவறானவர்களின் கையில் சிக்கி இந்த சட்டம் படும் பாடு. கேட்டால் கண்ணீர் வரும்.


என்னோடு பயிற்சியில் இருந்த காவல் நண்பர் ஒருவருடன் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தனது காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் அனுப்பிய ஒரு கடிதம் வந்திருப்பதாகவும் அது தமிழகம் முழவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பட்டிருப்பதாகவும் உனக்கு வந்ததா என்று கேட்டார். நான் எனது மேஜை மீது வைத்திருந்த ஒரு கடித்தை காட்டினேன். சிரித்து விட்டார்.


அதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் :

  1. காவல் நிலையங்களின் முன்பு பிச்சை எடுப்பவர்கள் எத்தனை பேர். ? வயது வாரியாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எத்தனை பேர். ?
  2. காவல் நிலையத்திற்கு வந்து செல்பவர்களில் எத்தனை பேர் மது அருந்திவிட்டு வருகிறார்கள் ஆண்கள் எவ்வளவு பெண்கள் எவ்வளவு ?
  3. காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு தண்டணை அடையும் குற்றவாளிகளி்ல் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர், புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர், ? வயது வாரியாக
  4. காவல் துறையினருக்கு டீக்கடைகளில் இலவசமாக டீ வழங்கப்படுகிறா ? எந்தெந்த கடைகளில் ? அந்த கடை எத்தனை வருடமாக நடத்தப்டுகிறது.
இதே போன்று சுமார் 40 கேள்விகள் . இந்த கேள்விகள். அனைத்திற்கு பதில் பெற்று அந்த வழக்குரைஞர் ஒன்றும் சாதித்து விட போவதில்லை. காவல் துறையால் அவருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு அனைத்து காவல் நிலையங்களுக்கு ஒரு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இக் கடித்தை அனுப்பியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

வரலாற்று புகழ் வாய்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் முதன் முதலில் சுவீடன் நாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் இச்சட்டம் கடந்த 2005 ஆண்டு கொண்டு வரப்பட்டது. பொது மக்கள் அரசு அலுவலரிடமிருந்து தங்களுக்கு தேவையான தகவல்களை அதிகாரபூர்வமாக பெற இச்சட்டம் வழி வகை செய்கிறது. வெளிப்படையான நிர்வாகம் மற்றும் லஞ்சத்தை கட்டுபடுத்த இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் 8 பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்ட்ட துறைகளன்றி மற்ற அனைத்து துறைகளும் மக்கள் கேட்கும் தகவலை அளித்தே ஆக வேண்டும்.

மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனக்கு தேவைப்படும் தகவலை அறிய ரு. 10 மட்டும் செலுத்தினால் போதும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனுப்பிய 30 நாட்களில் பதில் அனுப்பட வேண்டும் இல்லை என்றால் தாமதமாக்கப்படும் நாள் ஒன்றுக்கு ரு. 250 சம்மந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

அவர் ஒரு அரசு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி. காவல் நிலையத்திற்கு அடிக்கடி வருபவர் ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தான் இதுவரை ஆயிரம் கேள்விகள் வரை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளதாகவும். தனக்கு இது 1001 வது பதில் என்றும் சொன்னார். நான் கேட்டேன் இதனால் உங்களுக்கு என்ன பிரயோஜனம் என்று அவர் சொன்னார்.. தனக்கு இது தனக்கு பொழுது போக்கு என்றும் தனது ரிட்டயர்டு காலத்திற்கு பின் அரசு அலுவலர்களை கேள்வி கேட்க தனக்கு இது வாய்பாக பயன் படுத்தி கொள்கிறேன் என்றார். அதிகார போதை ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.

தகவல் அறியும் சட்டத்தின் சிறப்பை ஒரெ வரியில் சொல்வதென்றால் உங்களுடயை குடும்ப அட்டைக்கு நீங்கள் ரேஷன் கடைக்கு சென்று கோதுமை அல்லது சர்க்கரை கேட்கறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் இந்த மாதம் இருப்பு இல்லை சொல்கிறார். அப்போது நீங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தலாம். ரு. பத்து செலவில் நீங்கள் தகவல் ஆணையத்திடம் தகவல் கேட்டால் அவர்கள் அந்த மாதம் உங்கள் குடும்ப அட்டைக்கு சர்க்கரை வழங்கப்பட்டுள்ளதா ? இல்லையா ? என்பதை தெரிவிப்பார்கள். அதன் முலம் அந்த கடைக்காரரின் மேல் நடவடிக்கை முடியும். ஒரு குடும்ப அட்டைக்கே என்றால் உங்கள் பகுதி உள்ளவர்கள் அனைவரும் இதே போல் நடவடிக்கை எடுத்தால் அந்தகடைக்காரர் பின் தவறு செய்ய துணிவாரா ?

இப்படிப்பட்ட சிறப்புமிக்க சட்டம் தான் இன்று தவறானவர்களின் கையில் சென்று சீரழிந்து கொண்டிருக்கிறது. நண்பர்களே இந்திய அரசு நமக்களித்துள்ள இந்த சிறப்பான சட்டத்தை உரிய முறையில் பயன் படுத்துங்கள். முன்றாம் பிறை படத்தில் கமலுடன் சிலுக்கு நடித்த போது சிலுக்குக்கு என்ன வயசு என்ற ரேன்ச்சில் திரைபட துறைக்கு கடிதம் அனுப்புவதை விட்டு விட்டு உங்கள் பகுதியில் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர்கிறதா என்று அரசு துறைகளுக்கு கடிதம் அனுப்பி பதிலை பெற்று இச்சட்டம் பற்றி அறியாத ஊருக்கு உதவும் படிப்பறிவில்லாத நல் உள்ளங்களுக்கு உதவுங்கள்.

நானும் உங்களுடன்...

இது புதிய வலைப்பூ அல்ல, முன்பே தொடங்கினதுதான். பி.கே.பி. அவர்களின் wiki.pkp.in ல் எனது வலைப்பூவை அறிமுக பக்கத்தில் சுட்டியை முதன்முதல்ல போட்டிருந்தேன். நண்பர் கோவிகண்ணன் அவர்கள் மட்டும் பின்னுட்டமிட்டுருந்தார். நான் காவல் துறையில் பணிபுரிபவன். தேர்தல் அறிவிப்பினாலும் எனது துறையின் வேலை பளுவின் காரணமாகவும் தொடர்ந்து எழுத முடியாமல் போனது.

நான் முதன் முதலில் பிரரெளசிங் சென்டரில் வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது பி.கே.பியி்ன் வலைப்பபூவை பர்க்க நேர்ந்தது. அப்போது தான் தமிழ் வலைப்பூக்களை பற்றி மழுமையாக அறிந்து கொண்டேன். அவரது வலைப்பூவின் முலமே இயல்பாக கணிணி துறையில் ஆர்வம் என்பதால் நண்பர் தமிழ்நெஞ்சம் மற்றும் வடிவேலனின் கெளதம்இன்போடெக் ஆகிய வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்தேன்.

அரசு துறைகளில் பொது மக்களோடு அதிக தொடர்பு கொண்ட துறை காவல் துறை. ஆனால் மக்களுக்கு காவல் துறை என்றாலே லஞ்சம் வாங்குபவர்கள். பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களு்க்கு மட்டுமே பணிபுரிபவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கு இப்போதும் உண்டு.

உங்களில் பலர் பலவித பணிகளில் இருக்கலாம். சற்று நினைத்து பாருங்கள் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மனைவியுடன் செலவிடும் நேரம் எவ்வளவு? அதே சமயத்தில் காவல்துறையில் பணிபுரியும் எங்களை போன்றவர்கள் குடும்பத்துடன் செலவிடும் நேரம் எவ்வளவு? நினைத்து பாருங்கள். நான் படித்த காலத்தில் என்னை முதல் வகுப்பில் சேர்த்து விட்ட என் தந்தை நான் பள்ளி இறுதி படிக்கும் போது தான் வந்தார். (அதுவும் டி.சி. அவர் கையில் தான் கொடுப்பேன் என்று தலைமையாசிரியர் சொன்னதால் ) அவரை சொல்லி தவறு இல்லை ஏன் என்றால் அவரது பணி அப்படி அதை நான் இப்போது உணர்கிறேன்.

காவல் துறையில் ஆட்கள் பற்றாகுறை நிலவுகிறது. ஒரு காவல் நிலையத்தில் 60 காவலர் வேண்டும் என்றால் அதில் 25 பேர் மட்டுமே உள்ளனர். இன்று புற்றீசல் போல அரசியல் கட்சிகள் பெருகிவிட்டன. நாளொரு பேரணி பொழுதொரு உண்ணாவிரதம், என்று அவர்களுக்கு பாதுகாப்புக்கு செல்வதா ? தினமும் வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதா ? கட்சிகளின் மாநாடு, அரசியல் வாதிகளின் மாநாட்டு பாதுகாப்புக்கு செல்வதா ? தினசரி அலுவல் பார்ப்பதா ?

இப்படிப்பட்ட நிலையில் காவலர் பணியில் இருக்கும் போது பொது மக்கள் சட்டத்தை மீறும் போது மேற்கண்ட காரணங்களால் மக்களிடம் தனது எரிச்சலை காட்ட வேண்டியதாகிறது.

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் ஒரு பழ மொழி உண்டு. குற்றவாளியிடம் உண்மையை வாங்கனும்னா அடிச்சுதான் வாங்கியாகனும், மயிலே மயிலே இறகு போடுன்னா எந்த மயிலும் போடாது பிடுங்கிதான் ஆகனும். சத்தியராஜ் படம்னு நெனைக்கிறேன். படத்தில் சத்தியராஜ் ஒரு இன்ஹ்பெக்டர் குற்றவாளி்ன்னு பிடிச்சா அடிதான். நாசர் ஒரு நிருபரா வருவார் அவர் சத்தியராஜ் அடிக்கிறது தப்புன்னு எதிர்ப்பார். ஒரு நாள் நாசர் வீட்டுலயே ஒரு கை வைச்சுருவான். சத்தியராஜ் அவனுக்கு பிரியாணி வாங்கி போட்டு கேட்க நான் எடுக்கலன்னு சொல்வான் அப்புறம் பின்னி பெடலெடுக்க உண்மைய ஒத்துக்கிருவான். அது மாதிரிதான். காவல் துறையும். நிறை பேர் சொல்வாங்க ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கபடலன்னாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாதுன்னு இதில் எனக்கு உடன்பாடில்லை. விசாரிக்கும் போது ஒரு நிரபராதி அடி வாங்கிருக்கலாம் அதுகாக எல்லா குற்றவாளிகளையும் அடிக்க கூடாதுன்னு சொல்றத என்னால ஏத்துக்கக முடியல. ஒரு 5 வயது குழுந்தையை கற்பழித்தவனை கண்டால் பெண்ணை பெற்ற எவனுக்கும் ஆத்திரம் வரத்தான் செய்யும். 50 ருபாய் பணத்துக்காக கொலை செய்தவனை கண்டால், கைவிரல் மோதிரம் கழட்டினால் வரவில்லை என்று விரலை வெட்டிய திருடனை கண்டால், பெற்றொர்கள் முன்னிலையில் அவர்கள் பெண்ணை கற்பழித்தால் எவனுக்கும் ஆத்திரம் வரத்தான் செய்யும். அதுக்கும் கூட இப்போ ஆள் வந்தாச்சு மனித உரிமைகள் கழகம் ஒன்னு இருக்கு அதிலயும் இப்போ நிறைய டுப்ளிகேட் வந்தாச்சு. அப்படி ஏதெனும் பிரச்சினை வந்தால் " சார் எவ்வளவு தருவீங்க நாங்க ஒதுங்கிகிறோம் " என்று கேட்ட மனித உரிமை ஆர்வலர்களை பற்றியும் நான் அறிவேன்.

நான் கேட்கறேன். காலை 08.00 மணிக்கு ( நிழற்குடை இல்லாத .டத்தில் ) ஒரு போக்குவரத்து ஒழுங்கு செய்யும் காவலர் நின்றால் மதியம் 130 மணி வரை நிற்கிறார். அவரை எத்தனை முறை கடந்திருப்பீர்கள் என்றாவது நீங்கள் அவரை பற்றி நினைத்துண்டா ? அரை மணி நேரம் வெயிலில் சென்று வந்துவிட்டால் உங்களை ஆசுவாச படுத்தி கொள்ள எத்தனை கூல்டிரிங், பேன் வசதிகள். நாங்களும் மனிதர்கள் தான் உணருங்கள். இதில் பெண் காவலர் நிலையை யோசித்து பாருங்கள். இயற்கை உபாதை விஷயத்தில் ஆண்களின் நிலை கூட பரவாயில்லை. பெண்களின் நிலை.

அடுத்ததாக லஞ்சம் பற்றியது. 8 மணி நேரம் பணிபுரியும் ஆசிரியரின் சம்பளத்தை விட 24 மணி நேரம் பணிபுரியும் ஒர காவலரின் சம்பளம் மிகக்குறைவு. காவலர்கள் அனைவருக்குமே அரசு குடியிருப்புகள் கிடைத்து விடுவதில் ( குடியிருப்புகள் போது மானதாக இல்லை என்பதே உண்மை ) ஒரு காவலரின் அடிப்படை சம்பளம் ரு. 3050 மட்டுமெ அனைத்து வித பிடித்தமும் போக கையில் ரு. 6500 கிடைக்கும் இப்போது நகரத்தில் குறைந்த பட்ச வீட்டு வாடகை ரு. 2500 மற்றும் இன்றைய விலை வாசி நீங்கள் அறிந்தது தான். இதில் குடும்பம் நடத்து என்றால் எங்கே நடத்த

இதே நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் காவலர்களுக்கு 0800 மணி நேரமே பணி. சம்பளம் ரு. 10.000க்கு மேல் அங்கு சென்று லஞ்சம் கொடுத்து பாருங்கள் " போடா பட்டியின்ட மகனே " ன்னு காதோட அப்பீருவான். ( நான் வாங்கியிருக்கேன். ) இன்றும் காவல் துறையில் நேர்மையான லஞ்சம் வாங்காத நிறைய அதிகாரிகளை எனக்கு தெரியும் எல்லாதுறையிலும் கருப்பு ஆடுகள் உண்டு. காவல் துறையிலும் கருப்பு ஆடுகள் உண்டு.

அடுத்து மக்கள் பார்வையில் காவல் துறை : சில நாட்களுக்கு முன்பு ( சென்னை உயர் நீதிமன்ற பிரச்சினையின் போது ) காவல் நிலையத்தின் முன் நின்று கொண்டிருந்தேன். அப்போது சட்டக்கல்லூரி செல்லும் பேருந்தில் இருந்த சட்ட கல்லூரி மாணவர்கள் " காவல் நிலையத்தை பார்த்து " டேய் மாமாக்களா " என்றும் இன்னும் எழுத இயலாத வார்தைகளையும் சத்தம் போட்டுக் கொண்டு போனார்கள். உங்கள் குடும்பத்தை பற்றி ஒருவர் தவறாக கூறினால் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? ஆனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவர்களை அடிதாலும் எங்கள் மீது தான் நடவடிக்கை, அடிக்காவிட்டாலும் அவமானம் எங்களுக்குத்தான். அப்புறம் பொது மக்களு்க்கு எங்கள் மீது எப்படி நம்பிக்கை வரும்.

எனவே நண்பர்களே காவல்துறை மீது நம்பிக்கை வையுங்கள்.

பின்னொரு நாளில் தொடர்கிறேன்..............................



featured-content