எத்தனை நாட்களுக்குதான் நான் பணிபுரியும் என் துறையை பற்றி சொல்லி உங்களை வெறுப்பேற்றுவது ஆதலினால்..... காதல் பற்றி
காதல் என்பது இரு உள்ளங்கள் மனதால் ஒன்றுபட்டு அன்பினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புதான் காதல்
ஆனால் இன்றைய காதல்கள் போலிதனத்தின் வெளிப்பாடு, வீட்டில் கஞ்சிக்கு வழியில்லை என்றாலும், முகம் நிறைய புது வீட்டிற்கு வெள்ளையடித்ததை போல் பவுடர், கழுத்தில் கவரிங் நகை தெரிய இரண்டு பட்டன்களை கழட்டி விட வேண்டியது. நண்பனின் ஓசி பைக்கை வாங்கி கொண்டு மாலை நேரம் பள்ளி கல்லூரி அருகில் சுற்ற வேண்டியது. பல பெண்களை பார்க்க வேண்டியது. அதில் ஒன்று எப்படியாவது கண்டிப்பாக பார்க்கும். காதலர்கென்றே கண்டுபிடித்த காதலர் தினத்தில் ஒரு ரோஜாவை கொடுக்க வேண்டியது. பின் இருவரும் இணைந்து பார்க், பீச் என்று சுற்ற வேண்டியது.
பின் தன் நண்பர்கள் புடை சூழ ஒரு நாள் கோவிலிலோ அல்லது காவல் நிலையத்திலோ (!) ( இருக்கற பிரச்சினைகளில் இது தானே முதல் வேலை ) பெத்து 18 வருசம் வளத்துன தாய் தகப்பன் மண்ணவாரி தூத்த திருமணத்தை நடத்த வேண்டியது. கூட வந்தவன் எல்லலாம் "ஹேப்பி மேரிடு லைப் (?) மாப்ள ன்னுட்டு அவனவன் வீட்டுக்கு போயிடுவான். அப்புறம் பொண்ணோ இவனோ எடுத்துட்டு வந்த பணத்தில மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் கணக்கில ஜாலியா இருக்க வேண்டியது. பணம் தீர்ந்ததும் தான் அவர்கள் இருவரும் நிலையும் அவர்களுக்கு தெரியும். இதில் இருவரும் அவரவர் வீட்டுக்கும் போக முடியாது. உண்மையான நண்பர்கள் என்றாலும் அவர்களும் எத்தனை நாள் உதவி செய்வார்கள் ?.
இதற்கு காரணம் இன்றை திரைப்டங்களே, காதலிக்கவோ அல்லது காதலிக்கப்பட்டாளோதான் நாம் சமுதாயத்தில் வாழ்வதற்கு அர்த்தம் என்ற வகையில் திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு திரைப்படத்தில் பார்த்தாலும் கதாநாயகன் கதாநாயகியை காதலிக்க வேண்டியது. கிளைமாக்ஸில் கதாநாயகனுக்கு அல்லக்கையாக வரும் நண்பர்கள் ( அவ உன்னதான் பாக்குறாடா நண்பா !! ) இருவரையும் இணைத்து வைக்க வேண்டியது அப்புறம் சுபம்.
அதுக்கு அப்புறம் கதாநாயகன் கதாநாயகி சமுகத்தில் படும் அவலத்தை எத்திரைப்படமும் ( காதல் தவிர ) சொல்லவில்லை. சமுகத்தால் அங்கீகரிக்கபடாதவர்கள் இவ்வுலத்தில் சந்தோஷமாக வாழ்வது சாத்தியமில்லை. பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் காதல் தவிர ( உ.தா. சூர்யா ஜோதிகா ) இன்றை காதலுக்கு பொருளாதாரம் மிக அவசியம் என்றாகிவிட்டது. இன்றை பெண்கள் கூட ஆள் எவ்வளவு சம்பாதிக்கிறான் வேலை நிலையானதா என்று பார்த்து காதலிக்கும் நிலை உள்ளது.
காதலால் சாதி ஒழிகிறது என்ற கருத்தையும் என்னால் ஏற்க முடியவில்லை. ஒன்று காதலிப்பவர்கள்களில் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தங்களில் யார் தாழ்ந்த சாதியினாராய் இருக்கிறாரோ அவரது சாதியை குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வாங்குகிறார்கள். (அரசு சலுகைக்காக) அல்லது யார் உயர்ந்த சாதியினராய் இருக்கிறாரோ அவர் இனத்திலேயே பெண் எடுக்கும் அல்லது கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதில் சாதி எங்கு ஒழிகிறது. என்பது தெரியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் தாழ்ந்த சமுகத்தை சேர்ந்த ஆண் உயர் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தவரை இரண்டு ஆண்டுகளாக தேடி பெண்ணி சித்தப்பா கூலிப்படையினரை கொண்டு அந்த தாழந்த சாதி ஆணை வெட்டி கொன்று விட்டான். காதலிக்க தகுதியில்லாத நாடு இது.
நான் எனது காவல்துறை அனுபவத்தில் கண்ட வகையில் இன்றைய காதல்கள் 100% க்கு 98% காதல்கள் தோல்வியில் தான் முடிகின்றன. 2% காதல்கள் ஆணோ அல்லது பெண்ணோ உயர்ந்த பொருளாதரத்தில் இருப்பதன் முலம் அல்லது ஓரெ சாதியாய் இருப்பதன் முலம் வெற்றியடைகின்றன. காதலிக்கும் போது இருக்கும் தைரியமும், மனோதிடமும் திருமணம் முடித்து வாழ்க்கை நடத்தும் போது இருவருக்கும் இருப்பதில்லை.
நான் காதலுக்கு எதிரியில்லை நான் முதலில் சொன்னது போல் காதல் என்பது இரு உள்ளங்கள் மனதால் ஒன்றுபட்டு அன்பினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புதான் காதல் அது இப்போது இல்லை என்பதுதான் என் வாதம்.
காதல் என்பது இரு உள்ளங்கள் மனதால் ஒன்றுபட்டு அன்பினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புதான் காதல்
ஆனால் இன்றைய காதல்கள் போலிதனத்தின் வெளிப்பாடு, வீட்டில் கஞ்சிக்கு வழியில்லை என்றாலும், முகம் நிறைய புது வீட்டிற்கு வெள்ளையடித்ததை போல் பவுடர், கழுத்தில் கவரிங் நகை தெரிய இரண்டு பட்டன்களை கழட்டி விட வேண்டியது. நண்பனின் ஓசி பைக்கை வாங்கி கொண்டு மாலை நேரம் பள்ளி கல்லூரி அருகில் சுற்ற வேண்டியது. பல பெண்களை பார்க்க வேண்டியது. அதில் ஒன்று எப்படியாவது கண்டிப்பாக பார்க்கும். காதலர்கென்றே கண்டுபிடித்த காதலர் தினத்தில் ஒரு ரோஜாவை கொடுக்க வேண்டியது. பின் இருவரும் இணைந்து பார்க், பீச் என்று சுற்ற வேண்டியது.
பின் தன் நண்பர்கள் புடை சூழ ஒரு நாள் கோவிலிலோ அல்லது காவல் நிலையத்திலோ (!) ( இருக்கற பிரச்சினைகளில் இது தானே முதல் வேலை ) பெத்து 18 வருசம் வளத்துன தாய் தகப்பன் மண்ணவாரி தூத்த திருமணத்தை நடத்த வேண்டியது. கூட வந்தவன் எல்லலாம் "ஹேப்பி மேரிடு லைப் (?) மாப்ள ன்னுட்டு அவனவன் வீட்டுக்கு போயிடுவான். அப்புறம் பொண்ணோ இவனோ எடுத்துட்டு வந்த பணத்தில மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் கணக்கில ஜாலியா இருக்க வேண்டியது. பணம் தீர்ந்ததும் தான் அவர்கள் இருவரும் நிலையும் அவர்களுக்கு தெரியும். இதில் இருவரும் அவரவர் வீட்டுக்கும் போக முடியாது. உண்மையான நண்பர்கள் என்றாலும் அவர்களும் எத்தனை நாள் உதவி செய்வார்கள் ?.
இதற்கு காரணம் இன்றை திரைப்டங்களே, காதலிக்கவோ அல்லது காதலிக்கப்பட்டாளோதான் நாம் சமுதாயத்தில் வாழ்வதற்கு அர்த்தம் என்ற வகையில் திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு திரைப்படத்தில் பார்த்தாலும் கதாநாயகன் கதாநாயகியை காதலிக்க வேண்டியது. கிளைமாக்ஸில் கதாநாயகனுக்கு அல்லக்கையாக வரும் நண்பர்கள் ( அவ உன்னதான் பாக்குறாடா நண்பா !! ) இருவரையும் இணைத்து வைக்க வேண்டியது அப்புறம் சுபம்.
அதுக்கு அப்புறம் கதாநாயகன் கதாநாயகி சமுகத்தில் படும் அவலத்தை எத்திரைப்படமும் ( காதல் தவிர ) சொல்லவில்லை. சமுகத்தால் அங்கீகரிக்கபடாதவர்கள் இவ்வுலத்தில் சந்தோஷமாக வாழ்வது சாத்தியமில்லை. பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் காதல் தவிர ( உ.தா. சூர்யா ஜோதிகா ) இன்றை காதலுக்கு பொருளாதாரம் மிக அவசியம் என்றாகிவிட்டது. இன்றை பெண்கள் கூட ஆள் எவ்வளவு சம்பாதிக்கிறான் வேலை நிலையானதா என்று பார்த்து காதலிக்கும் நிலை உள்ளது.
காதலால் சாதி ஒழிகிறது என்ற கருத்தையும் என்னால் ஏற்க முடியவில்லை. ஒன்று காதலிப்பவர்கள்களில் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தங்களில் யார் தாழ்ந்த சாதியினாராய் இருக்கிறாரோ அவரது சாதியை குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வாங்குகிறார்கள். (அரசு சலுகைக்காக) அல்லது யார் உயர்ந்த சாதியினராய் இருக்கிறாரோ அவர் இனத்திலேயே பெண் எடுக்கும் அல்லது கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதில் சாதி எங்கு ஒழிகிறது. என்பது தெரியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் தாழ்ந்த சமுகத்தை சேர்ந்த ஆண் உயர் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தவரை இரண்டு ஆண்டுகளாக தேடி பெண்ணி சித்தப்பா கூலிப்படையினரை கொண்டு அந்த தாழந்த சாதி ஆணை வெட்டி கொன்று விட்டான். காதலிக்க தகுதியில்லாத நாடு இது.
நான் எனது காவல்துறை அனுபவத்தில் கண்ட வகையில் இன்றைய காதல்கள் 100% க்கு 98% காதல்கள் தோல்வியில் தான் முடிகின்றன. 2% காதல்கள் ஆணோ அல்லது பெண்ணோ உயர்ந்த பொருளாதரத்தில் இருப்பதன் முலம் அல்லது ஓரெ சாதியாய் இருப்பதன் முலம் வெற்றியடைகின்றன. காதலிக்கும் போது இருக்கும் தைரியமும், மனோதிடமும் திருமணம் முடித்து வாழ்க்கை நடத்தும் போது இருவருக்கும் இருப்பதில்லை.
நான் காதலுக்கு எதிரியில்லை நான் முதலில் சொன்னது போல் காதல் என்பது இரு உள்ளங்கள் மனதால் ஒன்றுபட்டு அன்பினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புதான் காதல் அது இப்போது இல்லை என்பதுதான் என் வாதம்.
நன்றி .................



