twitter
    Find out what I'm doing, Follow Me :)

மனித உருவில் ஒரு காமகொடுரன்




                 நண்பர்களுக்கு வணக்கம், வேலைப்பளுவின் காரணமாக அதிகம் எழுத முடியவில்லை தமிழிஷ் முலம் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கிறேன்.


                புவனேஸ்வரி கைது, நடிகைகள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் கற்பு பற்றிய விவாதங்களை தவிர்த்து  கடந்த மாதங்களில் நீங்கள் செய்தி தாள்களில் ஒரு செய்தியை படித்திருக்கலாம். பெண் போலீஸ் ஜெயமணி  கற்பழித்து கொலை. கொலையாளிக்கு காவல் துறை வலை வீச்சு ( இந்த வார்த்தைய எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல ) 

                ஜெயமணி திருப்பூர் மாவட்டம். காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர். கடந்த மாதம் நடந்த அரசு விழாவிற்கு சென்றவர். கடத்தி கற்பழிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ளார். வி.ஐ.பி. வருகையின் போது சாலை பகுதியில் பாதுகாப்பிற்கு நின்று சாலையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்தவர் பணி முடித்து வீடு திரும்ப பேருந்துகளை கை காட்டி நிறுத்தியிருக்கிறார். ஆனால் எந்த பேருந்தும் நிறுத்தாமல் சென்று விட சாலையில்  வந்த ஒருவனிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவனும் ஏற்றிக் கொண்டு செல்ல ஆளில்லா ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி கழுத்தில் கத்தியை வைத்து கீறியுள்ளான். தப்பித்து ஓட முற்பட பெரிய கல்லை எடுத்து பின்னந்தலையில் அடித்திருக்கிறான்.

               நினைவிழந்த நிலையில் கிடந்த அவரை இரு முறை கற்பழித்து உள்ளான். நினைவு திரும்பிய அந்த பெண் போலீஸ் அவனை கெஞ்சியிருக்கிறாள். தன் குழந்தைகளை பார்க்காவாவது தன்னை உயிருடன் விட்டுவிடும்படி.

                   அந்த காம கொடுரன் உன்னை விட்டால் நீ என்னை காட்டி கொடுத்து விடுவாய் என்று சொல்லியே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். பின் அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் அணிந்திருந்த  நகைகள் ஆகியவற்றை எடுத்து தப்பி விட்டான்.

                    பெண் போலீஸ்சின் கணவர் அவர் பணி முடித்து வராததால், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்க அவர் பணி முடித்து போய்விட்டதாக காவல் நிலைத்தில் சொல்லப்பட்டது. அவரும் உறவினர் வீடுகளில் தேடிவிட்டு அடுத்த தனது மனைவி காணமல் போய்விட்டாக புகார் கொடுக்க புலண் விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டது. 

                    சம்பவம் நடந்த 18 நாட்கள் கழித்து அவரது உடல் அவர் பணி செய்த இடத்தில் இருந்து சுமார் ஆறு கி.மீ தொலைவில் சுடுகாட்டில் கண்டு எடுக்கப்பட்டது.  

                      கொலையாளியால் எடுக்கப்பட்ட செல்போனை கொண்டு கொலையாளியின் இருப்பிடம் கண்டுபிடித்து அவனை கைது செய்தது காவல் துறை. 

                      மேற்படி இச்சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் அவனால் கொல்லப்பட்டவர்கள். ஐந்து பேர் அனைவரும் பெண்கள் இது வரை மொத்தம் 18 பேர் அதில் ஒருவர் மட்டுமே ஆண். 

                            இதில காமெடி என்னானா அவனை வந்து முகமுடி போட்டு கூட்டுட்டு போனாங்க.. ஏதோ முகத்த காமிச்சு கூட்டிட்டு போனாக்கூட நாலு பொண்ணுங்க பாத்து ஊஷாராவாங்க... 

                            அவனுடைய குறி தேசிய நெடுஞ்சாலையில சுமார் ஒரு கி.மீட்டருக்குள்ள ஆடு மேய்க்கும் தனியாக உள்ள பெண்கள் முதலில் கத்தியால் கழுத்தில் கீறுவது அப்புறம் அரை மயக்கத்தில் இருக்கும் அந்த பெண்ணை கற்பழித்து கொன்று விட்டு நகைகளுடன் தப்பிவிடுவது. 59 வயசு கிழவிய கூட விட்டு வைக்கல.. 

                                 இனி என்னவாகும் வழக்கு நடக்கும். கலைஞர் அய்யா புண்ணியத்துல ஜெயில கறி எல்லாம் போடுறாங்களாம். நல்லா சாப்பிட்டு இருந்துட்டு. மேற்படி வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாததால் அவனும் வெளியே வந்து விடுவான். சொறிபுடுச்சன் கையி சும்மாருக்காதுகற கதையா மறுபடியும் ஆரம்பிச்சுடுவான். அப்படி அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாலும், மனித இனத்தை காக்க வந்த மனித உரிமை கழகங்கள் ( எத்தனை இருக்குனே தெரியல ) அவனை தூக்கில் போடக்கூடாது என்று ஆயிரம் போராட்டங்கள் நடத்துவாங்க. 
 
 
              சரி நீங்க சொல்லுங்க அவனுக்கு என்ன தண்டணை கொடுக்கலாம். ?


நட்புடன்
 

featured-content