twitter
    Find out what I'm doing, Follow Me :)

நானும் உங்களுடன்...

இது புதிய வலைப்பூ அல்ல, முன்பே தொடங்கினதுதான். பி.கே.பி. அவர்களின் wiki.pkp.in ல் எனது வலைப்பூவை அறிமுக பக்கத்தில் சுட்டியை முதன்முதல்ல போட்டிருந்தேன். நண்பர் கோவிகண்ணன் அவர்கள் மட்டும் பின்னுட்டமிட்டுருந்தார். நான் காவல் துறையில் பணிபுரிபவன். தேர்தல் அறிவிப்பினாலும் எனது துறையின் வேலை பளுவின் காரணமாகவும் தொடர்ந்து எழுத முடியாமல் போனது.

நான் முதன் முதலில் பிரரெளசிங் சென்டரில் வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது பி.கே.பியி்ன் வலைப்பபூவை பர்க்க நேர்ந்தது. அப்போது தான் தமிழ் வலைப்பூக்களை பற்றி மழுமையாக அறிந்து கொண்டேன். அவரது வலைப்பூவின் முலமே இயல்பாக கணிணி துறையில் ஆர்வம் என்பதால் நண்பர் தமிழ்நெஞ்சம் மற்றும் வடிவேலனின் கெளதம்இன்போடெக் ஆகிய வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்தேன்.

அரசு துறைகளில் பொது மக்களோடு அதிக தொடர்பு கொண்ட துறை காவல் துறை. ஆனால் மக்களுக்கு காவல் துறை என்றாலே லஞ்சம் வாங்குபவர்கள். பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களு்க்கு மட்டுமே பணிபுரிபவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கு இப்போதும் உண்டு.

உங்களில் பலர் பலவித பணிகளில் இருக்கலாம். சற்று நினைத்து பாருங்கள் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மனைவியுடன் செலவிடும் நேரம் எவ்வளவு? அதே சமயத்தில் காவல்துறையில் பணிபுரியும் எங்களை போன்றவர்கள் குடும்பத்துடன் செலவிடும் நேரம் எவ்வளவு? நினைத்து பாருங்கள். நான் படித்த காலத்தில் என்னை முதல் வகுப்பில் சேர்த்து விட்ட என் தந்தை நான் பள்ளி இறுதி படிக்கும் போது தான் வந்தார். (அதுவும் டி.சி. அவர் கையில் தான் கொடுப்பேன் என்று தலைமையாசிரியர் சொன்னதால் ) அவரை சொல்லி தவறு இல்லை ஏன் என்றால் அவரது பணி அப்படி அதை நான் இப்போது உணர்கிறேன்.

காவல் துறையில் ஆட்கள் பற்றாகுறை நிலவுகிறது. ஒரு காவல் நிலையத்தில் 60 காவலர் வேண்டும் என்றால் அதில் 25 பேர் மட்டுமே உள்ளனர். இன்று புற்றீசல் போல அரசியல் கட்சிகள் பெருகிவிட்டன. நாளொரு பேரணி பொழுதொரு உண்ணாவிரதம், என்று அவர்களுக்கு பாதுகாப்புக்கு செல்வதா ? தினமும் வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதா ? கட்சிகளின் மாநாடு, அரசியல் வாதிகளின் மாநாட்டு பாதுகாப்புக்கு செல்வதா ? தினசரி அலுவல் பார்ப்பதா ?

இப்படிப்பட்ட நிலையில் காவலர் பணியில் இருக்கும் போது பொது மக்கள் சட்டத்தை மீறும் போது மேற்கண்ட காரணங்களால் மக்களிடம் தனது எரிச்சலை காட்ட வேண்டியதாகிறது.

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் ஒரு பழ மொழி உண்டு. குற்றவாளியிடம் உண்மையை வாங்கனும்னா அடிச்சுதான் வாங்கியாகனும், மயிலே மயிலே இறகு போடுன்னா எந்த மயிலும் போடாது பிடுங்கிதான் ஆகனும். சத்தியராஜ் படம்னு நெனைக்கிறேன். படத்தில் சத்தியராஜ் ஒரு இன்ஹ்பெக்டர் குற்றவாளி்ன்னு பிடிச்சா அடிதான். நாசர் ஒரு நிருபரா வருவார் அவர் சத்தியராஜ் அடிக்கிறது தப்புன்னு எதிர்ப்பார். ஒரு நாள் நாசர் வீட்டுலயே ஒரு கை வைச்சுருவான். சத்தியராஜ் அவனுக்கு பிரியாணி வாங்கி போட்டு கேட்க நான் எடுக்கலன்னு சொல்வான் அப்புறம் பின்னி பெடலெடுக்க உண்மைய ஒத்துக்கிருவான். அது மாதிரிதான். காவல் துறையும். நிறை பேர் சொல்வாங்க ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கபடலன்னாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாதுன்னு இதில் எனக்கு உடன்பாடில்லை. விசாரிக்கும் போது ஒரு நிரபராதி அடி வாங்கிருக்கலாம் அதுகாக எல்லா குற்றவாளிகளையும் அடிக்க கூடாதுன்னு சொல்றத என்னால ஏத்துக்கக முடியல. ஒரு 5 வயது குழுந்தையை கற்பழித்தவனை கண்டால் பெண்ணை பெற்ற எவனுக்கும் ஆத்திரம் வரத்தான் செய்யும். 50 ருபாய் பணத்துக்காக கொலை செய்தவனை கண்டால், கைவிரல் மோதிரம் கழட்டினால் வரவில்லை என்று விரலை வெட்டிய திருடனை கண்டால், பெற்றொர்கள் முன்னிலையில் அவர்கள் பெண்ணை கற்பழித்தால் எவனுக்கும் ஆத்திரம் வரத்தான் செய்யும். அதுக்கும் கூட இப்போ ஆள் வந்தாச்சு மனித உரிமைகள் கழகம் ஒன்னு இருக்கு அதிலயும் இப்போ நிறைய டுப்ளிகேட் வந்தாச்சு. அப்படி ஏதெனும் பிரச்சினை வந்தால் " சார் எவ்வளவு தருவீங்க நாங்க ஒதுங்கிகிறோம் " என்று கேட்ட மனித உரிமை ஆர்வலர்களை பற்றியும் நான் அறிவேன்.

நான் கேட்கறேன். காலை 08.00 மணிக்கு ( நிழற்குடை இல்லாத .டத்தில் ) ஒரு போக்குவரத்து ஒழுங்கு செய்யும் காவலர் நின்றால் மதியம் 130 மணி வரை நிற்கிறார். அவரை எத்தனை முறை கடந்திருப்பீர்கள் என்றாவது நீங்கள் அவரை பற்றி நினைத்துண்டா ? அரை மணி நேரம் வெயிலில் சென்று வந்துவிட்டால் உங்களை ஆசுவாச படுத்தி கொள்ள எத்தனை கூல்டிரிங், பேன் வசதிகள். நாங்களும் மனிதர்கள் தான் உணருங்கள். இதில் பெண் காவலர் நிலையை யோசித்து பாருங்கள். இயற்கை உபாதை விஷயத்தில் ஆண்களின் நிலை கூட பரவாயில்லை. பெண்களின் நிலை.

அடுத்ததாக லஞ்சம் பற்றியது. 8 மணி நேரம் பணிபுரியும் ஆசிரியரின் சம்பளத்தை விட 24 மணி நேரம் பணிபுரியும் ஒர காவலரின் சம்பளம் மிகக்குறைவு. காவலர்கள் அனைவருக்குமே அரசு குடியிருப்புகள் கிடைத்து விடுவதில் ( குடியிருப்புகள் போது மானதாக இல்லை என்பதே உண்மை ) ஒரு காவலரின் அடிப்படை சம்பளம் ரு. 3050 மட்டுமெ அனைத்து வித பிடித்தமும் போக கையில் ரு. 6500 கிடைக்கும் இப்போது நகரத்தில் குறைந்த பட்ச வீட்டு வாடகை ரு. 2500 மற்றும் இன்றைய விலை வாசி நீங்கள் அறிந்தது தான். இதில் குடும்பம் நடத்து என்றால் எங்கே நடத்த

இதே நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் காவலர்களுக்கு 0800 மணி நேரமே பணி. சம்பளம் ரு. 10.000க்கு மேல் அங்கு சென்று லஞ்சம் கொடுத்து பாருங்கள் " போடா பட்டியின்ட மகனே " ன்னு காதோட அப்பீருவான். ( நான் வாங்கியிருக்கேன். ) இன்றும் காவல் துறையில் நேர்மையான லஞ்சம் வாங்காத நிறைய அதிகாரிகளை எனக்கு தெரியும் எல்லாதுறையிலும் கருப்பு ஆடுகள் உண்டு. காவல் துறையிலும் கருப்பு ஆடுகள் உண்டு.

அடுத்து மக்கள் பார்வையில் காவல் துறை : சில நாட்களுக்கு முன்பு ( சென்னை உயர் நீதிமன்ற பிரச்சினையின் போது ) காவல் நிலையத்தின் முன் நின்று கொண்டிருந்தேன். அப்போது சட்டக்கல்லூரி செல்லும் பேருந்தில் இருந்த சட்ட கல்லூரி மாணவர்கள் " காவல் நிலையத்தை பார்த்து " டேய் மாமாக்களா " என்றும் இன்னும் எழுத இயலாத வார்தைகளையும் சத்தம் போட்டுக் கொண்டு போனார்கள். உங்கள் குடும்பத்தை பற்றி ஒருவர் தவறாக கூறினால் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? ஆனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவர்களை அடிதாலும் எங்கள் மீது தான் நடவடிக்கை, அடிக்காவிட்டாலும் அவமானம் எங்களுக்குத்தான். அப்புறம் பொது மக்களு்க்கு எங்கள் மீது எப்படி நம்பிக்கை வரும்.

எனவே நண்பர்களே காவல்துறை மீது நம்பிக்கை வையுங்கள்.

பின்னொரு நாளில் தொடர்கிறேன்..............................



featured-content